மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ஒன்றிய அரசின் முன்மாதிரி கிராமத் திட்டமான சன்ஷாத் ஆதர்ஸ் கிராம யோஜனாவின் கீழ் 5 கிராமங்களை மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் தத்தெடுத்துள்ளார். இக்கிராமங்களில் நேரடியாக சென்று மதுரை லேடி டோக் கல்லூரி மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் நேரடியாகச் சென்று கள ஆய்வில் ஈடுபட்டனர். அதன் முடிவுகளை ஒரு நூலாக்கி வெளியிட்டுள்ளனர். இந்த நிகழ்வு அக்டோபர் 27 அன்று லேடி டோக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஆய்வறிக்கையை வெளியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆற்றிய உரையின் பகுதிகள் :
ம துரையில் தற்போது சாலையோர வியாபாரிகளுக்கான கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.இந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு மிகவும் பயன்பட்டது மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுப் பணிகள் குறித்து லேடிடோக் கல்லூரி மாணவிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்த விபரங்கள் தான். மதுரை அனைத்து வங்கி அதிகாரிகள், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில், “மதுரை மாநகராட்சியில் 42 ஆயிரம் சாலையோர வியாபாரிகள் உள்ளனர்; அதில் 70 சதவீதம் பேர் பெண்கள்; தனியாக உள்ள பெண்கள் 50 சதவீதம்பேர்; ஒரு நாளில் 500 ரூபாய்க்கும் குறைவாக வியாபாரம் செய்யக்கூடியவர்கள் 70 சதவீதம் பேர் உள்ளனர்” என்று களஆய்வு அறிக்கையில் உள்ள தரவுகளை நான் சொன்னபோது, அனைத்து அதிகாரி களும் பிரமித்துப்போயினர். இதற்கு முன்பு அதிகாரிகள், 20 ஆயிரம் சாலையோர வியாபாரிகள்தான் உள்ள தாக கருதிக் கொண்டிருந்தனர்.
லேடிடோக் கல்லூரி மாணவி களின் ஆய்வறிக்கையை அடிப்படை யாகக் கொண்டு, சாலையோர வியாபாரி களுக்கு ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.10 கோடி அளவில் கடன் வழங்கும் மெகா திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இத்திட்டத்தை மேற்கொள்ளக் காரணமாக இருந்த லேடிடோக் கல்லூரி மாணவிகளுக்கு நன்றி.
5 கிராமங்கள்
தன்னிறைவு பெற்ற முன்மாதிரி கிராம திட்டத்தின் ( சன்சாத் ஆதர்ஷ் கிராம யோஜனா) கீழ் ஒரு வருடத்திற்கு ஒரு கிராமத்தை தத்தெடுத்துக்கொள்ள வேண்டும். இதன்படி இந்த 5 வருடத்தில் மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்குள் 5 கிராமங்களை தத்தெடுத்துள்ளேன்.
இந்த கிராமங்களைத் தற்போது ஆய்வு செய்துள்ளனர் மாணவிகள். கள ஆய்வின் போது, மாணவிகள் எழுப்பிய சின்ன சின்ன கேள்விகளுக்கு எளிய மனிதர்கள் அளித்த பதில்கள், சமூகத்திற்கும் ஆளுகிறவர்களுக்கும் முக்கியமானவை.கத்திரிக்காய்க்கு தெளிக்கப்படுகிற ரசாயன உரத்தின் அளவு பற்றி ஆரம்பித்து, வயதிற்கு வந்த மாணவிகள் பள்ளிக்கல்வியை இடையில் நிறுத்தியது வரை பல புதிய தகவல்களை மாணவிகள் கண்டறிந்து கூறியுள்ளனர்.
வெறும் ஆய்வாக மட்டுமின்றி, இடைநின்ற மாணவர்கள் 3 பேரை மாணவிகள் நேரில் சந்தித்துப்பேசி யுள்ளனர். பின்னர் அவர்களது பெற் றோர்களையும் பள்ளி தலைமை யாசிரியர், ஆசிரியர்களையும் சந்தித்துப் பேசி, அந்த மாணவர்களை பள்ளியில் மீண்டும் சேர்த்துள்ளனர். அந்த 3 மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, தற்போது பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர் என்பது மிகவும் மகிழ்வான செய்தி. இந்த செயல் மாணவிகளுக்கு மிகவும் நம்பிக்கை கொடுக்கும்.எங்களுக்கும் நம்பிக்கை கொடுக்கும். கல்வியின்பால் உள்ள செயல்பாட்டிலிருந்து, சமூகத்தின்பால் இருக்கிற ஆர்வத்திற்கு நம்மை உந்தித்தள்ளுகிற நடவடிக்கை இது. மதுரை அருகே உள்ள அரிட்டாபட்டி கிராமம் குறித்த வரலாற்று முக்கியத்து வம் அங்குள்ள மாணவர்களுக்கு தெரிந்துள்ளது என்று களஆய்வில் தெரியவந்து மிகவும் நம்பிக்கைக்குரிய விஷயம்.
எழுதப்பட்டுள்ள விபரங்கள் மூலம் படிப்பதை விட, களஆய்வு மூலம் கிடைக்கிற அனுபவம் மூலம் கற்பது முக்கியமானது.
தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங் களில் மக்கள் பிரதிநிதிகளாக பொதுச் சமூகத்தை ஈடுபடுத்துவது என்ற அடிப்படையில் 211 மாணவிகள் கள ஆய்வு மேற்கொண்டு ஆய்வேடு தயாரித்துள்ளது என்பது இந்திய அள வில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.இந்த ஆய்வேட்டை நாடாளுமன்ற கமிட்டியிடம் சமர்ப்பிக்க உள்ளேன். தமிழ்நாட்டு மாணவிகள் கிராமங்களை எந்த கோணத்தில் பார்த்துள்ளனர் என்பதை அவர்கள் இதன்மூலம் தெரிந்துகொள்ளட்டும்.
தோல்வியடைந்த திட்டம்
ஒன்றிய அரசின் முன்மாதிரி கிராமத்திட்டமான ‘சான்சத் திட்டம்’ என்பது ஒரு தோல்வியடைந்த திட்டம் முன்மாதிரியான கிராமங்களைத் தானே நீங்கள் தேர்வுசெய்யப் போனீர்கள். இதில் ஏதாவது முன்மாதிரி யை கண்டுபிடித்தீர்களா? இந்த திட்டத்திற்கான நோக்கம் மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை இரண்டு காரணங்களாகச் சொல்லலாம்.
இந்தியா முழுவதும் ஒரே அளவு கோல் இந்த திட்டத்திற்கு உள்ளது. முன்மாதிரியான கிராம திட்டம் என்றால் உத்தரப்பிரதேசத்தில் உள்ள கிராமத்திற்கும் தமிழ்நாட்டில் உள்ள கிராமத்திற்கும் ஒரே அளவுகோல் இருக்கவே முடியாது. உதாரணமாக, 2035 ஆம் ஆண்டிற்குள் 50 சதவீத உயர்கல்வியை எட்டுவது என்பது இந்த திட்டத்தின் இலக்கு.ஆனால் தமிழ கத்தின் வீரபாண்டி கிராமத்தில் உயர்கல்வி என்பது 62 சதவீதம். ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் உயர்கல்வி 50 சதவீதத்தை தாண்டிவிட்டது.
தமிழ்நாட்டில் 40 ஆயிரம் நூல கங்கள் உள்ளன.உத்தரப்பிரதேசத்தில் ஆயிரம் நூலகங்கள் கூட இல்லை. மத்தியப்பிரதேசத்தில் 42 நூல கங்கள் மட்டுமே உள்ளன. எனவே தமிழகத்தின் இலக்கும் உத்தரப்பிர தேசத்தின் இலக்கும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?அ ரசுப்பொது போக்கு வரத்துத் துறையே இல்லாத மத்தியப்பிர தேசத்தின் இலக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் கொடுக்கின்ற தமிழகத்தின் இலக்கும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? வாழ்வியல் தரமும் வேறுபட்டது.
தமிழகத்தில் உள்ள எந்த நகரங்களி லும் மரத்தடிகளின் கீழ் சிகைதிருத்தும் தொழிலாளியை பார்க்க முடியாது. ஆனால் தலைநகரமான புதுதில்லியில் ரிசர்வ் வங்கி தலைமையகத்தைச் சுற்றிய பகுதியில் மரத்தடிகளின் கீழ் முடிவெட்டும் தொழிலாளி இருப்பார். அவரிடம் முடிவெட்ட நான்கைந்து பேர் வரிசையில் காத்திருப்பர். இந்த காட்சியை தமிழகத்தின் எந்த நகரத்தி லும் பார்க்க முடியாது.
100 சதவீதம் மருத்துவமனையில் பிரசவங்களை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்த திட்டம் சொல்கிறது. தமிழகத்தில் 93 சத வீதம் மருத்துவமனை பிரசவங்கள். உத்தரப்பிரதேசத்தில் 62 சதவீதம் தான். தமிழகத்தில் அரசு மருத்துவ மனைகளில் சுகப்பிரசவம் அதிகமாக வும சிசேரியன் குறைவாகவும் உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் சுகப் பிரசவம் குறைவாகவும் சிசேரியன் அதிகமாகவும் உள்ளது.இதை கட்டுப்படுத்துவது குறித்துத்தான் தமிழகத்தில் பேச வேண்டும். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசத்தில் முதலில் மருத்துவமனைக்கே மக்களை வரவைக்க வேண்டியுள்ளது.
களஆய்வின் மூலம் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் மாணவிகள் பேசிய பல விஷயங்களை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டங்களில் நான் பேசியுள்ளேன்.இந்த திட்டத்திற்கென தனி நிதி ஒதுக்கீடு கிடையாது.இதுதான் இத்திட்டத்தின் தோல்விக்கு காரணம்.முன்மாதிரியான திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு தேவை. நிதி ஒதுக்குவதற்கான வழிமுறைகள் தேவை. சமூக பாதுகாப்பு நிதியை ஒன்றிய அரசின் நிறுவனங்கள், இந்த திட்டத்திற்கான நிதியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று விதிமுறை இருந்தால்தான் முன்மாதிரி கிராம திட்டத்தின் இலக்கை அடைய முடியும்.வெறும் ஆலோசனைகள் மட்டும் பயன்தராது.